×

அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட எண்ணூர் உர ஆலை முன் பொதுமக்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

சென்னை: அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட எண்ணூர் உர ஆலை முன் பொதுமக்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. கோரமண்டல் உர ஆலை செயல்பட தடை விதித்து நோட்டீஸ் ஒட்டப்பட்ட நிலையில் மக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கோரமண்டல் தொழிற்சாலை நுழைவாயில் முன் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரசாயன ஆலையில் நேற்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டது. பொதுமக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

The post அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட எண்ணூர் உர ஆலை முன் பொதுமக்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Ennore Fertilizer ,Plant ,Chennai ,Ennoor Fertilizer ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...